அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இசை ஆசிரியர் செய்த தவறுகள் வெளியே வந்துள்ளது.
அமெரிக்காவின் டியூபேஜ் கவுண்டியாவை சேர்ந்த நாதன் பிரம்ஸ்டெட் (42) என்பவர் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது மாணவியிடம் பல மாதங்களாக தவறுதலாக நடந்து கொண்டு வந்துள்ளாதாக இவர் மீது குற்றசாட்டு எழுந்தது. ஆனால் நாதன் தன்னை நல்லவர் போல் நடித்துக் காட்டிக் கொண்டு வந்த நிலையில் அவரின் குற்றங்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் அந்த மாணவியும் இந்த சம்பவம் தொடர்பான விஷயங்கள் பற்றி புகார் கொடுக்காத நிலையில் கடந்த ஆண்டு இதனைப் பற்றி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நாதனை கைது செய்தனர். இதற்குப் பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் இவருக்கு ஜாமீன் தொகையாக $500,000 நியமனம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மே மாதம் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் நாதன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.