Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வீர, தீர தினத்தில்”… சி.ஆர்.பி.எப் சார்பில் ரத்த தான முகாம்…!!

ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவள்ளுவர் மாவட்டம், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் “வீர, தீர தினம்” அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில் ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை சார்பாக சி.ஆர்.பி.எப் வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாமை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆஸ்பத்திரி இணைந்து நடத்தி உள்ளன.இந்த முகாமிற்கு சிறப்பு விருந்தினராக சி.ஆர்.பி.எப் டி.ஐ.ஜி தினகரன் பங்கேற்று ரத்ததானம் வழங்கி இந்த முகாமை தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்த சி.ஆர்.பி.எப்  வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |