Categories
மாநில செய்திகள்

வெயிலால் வைகை நீராவியாக போகுது…. தர்மாகோல் எடுத்துட்டு கிளம்புங்க…. பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி….!!!!

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவையில் செல்லூர் ராஜு பேசியதால் அனைவரும் சிரித்தனர். சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது செல்லூர் ராஜூ மின்வெட்டு வராமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். மேலும் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக பேசினார். இதற்கு பதில் அளிக்க எழுந்த செந்தில் பாலாஜியை முதல்வர் முக ஸ்டாலின் வேண்டாம் என்று தடுத்து நிறுத்திவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாட்டில் மின் தடை இல்லை எனத்தெரிந்து தடை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் தர்மாகோல் விஞ்ஞானி. சித்திரை வெயிலால் வைகை நீராவியாக விடாமல் தடுக்க உடனடியாக தர்மாகோலை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |