பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தவணை கிராமத்தில் ஆதீனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி மாரியம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.