விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் கோவில் தெருவில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நடராஜன் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சுபாஷினி தனது கணவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நடராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக நடராஜனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.