Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே துலாம்பூண்டி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செட்டித்தாங்கல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து ஏழுமலை கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஏழுமலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |