Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு தேர்வு குறித்து….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிவுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23-ஆம் தேதியும் முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இவர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்தாகவும், உங்களுக்கு தெரிந்த கேள்விகளை தைரியமாக எழுத வேண்டும் எனவும் கூறினார். மேலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது பதற்றம் அடையாமல் இருப்பதற்காகவே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் பொறுப்புடன் படிக்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |