மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு சசி ஜெயபிரகாஷ், பெரி இவான்ஸ், ஜோசப் கெனி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடையில் கட்டி தூக்கி வந்தனர். இந்த போராட்டத்தில் மக்கள் நீதி கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.