Categories
தேசிய செய்திகள்

சித்திரை விஷு பண்டிகை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு… வெளியான தகவல்…!!!!!

சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று  நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை காலை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பதால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 15-ந் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Categories

Tech |