Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்…. கல்லூரி மாணவர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை, ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கல்லூரியில் பேராசிரியர்களும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் மாணவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும், போதுமான அளவு பேராசிரியர்களை நியமிக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சின்னசேலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட முடியாது எனவும், மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவர்ஹலால், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தாசில்தார் விஜய பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் மாணவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர். அதன்பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |