Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறைக் கைதிகளுக்கே செல்போன் விற்பனை செய்த காவலர்கள்

புதுச்சேரியில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்ததால் நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறைக்காவலர்கள் கைதிகளிடம் செல்போன் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து சிறைக்காவலர்கள் சபரி சீனும் சங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ள.து இரண்டு தினங்களுக்கு முன்பு சிறைக்கைதி ஷர்மா செல்போன் மூலம் ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கைதிகளுக்கு செல்போன் விற்றதாக 4 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |