கனடாவில் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை.
டொரண்டோவில் உள்ள கல்லூரியில் உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் மேலாண்மைதுறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் Sherboune சுரங்க ரெயில் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று எதிர்பாராத விதமாக கார்த்திக் வாசுதேவ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உயிரிழந்து விட்டதாக கனடா விற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து கார்த்திக்கின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்திய தூதரகம் கார்த்திக்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெளியூர் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கார்த்திக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.