கடன் தொல்லையால் பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமரவாதி அருகே உள்ள கோவில் வீதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்ற நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் திவ்யா கடன் தொல்லையால் மன கவலையில் இருந்துவந்த நிலையில் தனது அறையில் மின் விசிறியில் சேலையை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இளம்பெண் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.