Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரியாக விநியோகம் செய்யவில்லை…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி பாளையம்-தோகைமலை மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |