Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தரமற்ற சாக்லேட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி…!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் மற்றும் உணவு விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி.

கொடைக்கானலில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை வகித்து கூறியுள்ளதாவது, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்கக்கூடிய டீத்தூள், நறுமண பொருட்கள் மற்றம் சாக்லேட் உள்ளிட்டவற்றில் தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி இடம் பெற்றிருக்க வேண்டும்.

கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு காலாவதி தேதி குறித்த ஸ்டிக்கர் கட்டாயமாக ஒட்டிருக்க வேண்டும். மேலும் தயார் செய்யும் உணவு பொருட்களில் விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார். விற்கப்படும் பொருட்களில் தரம் இல்லாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் முன் கூறியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

காலாவதியான சாக்லேட் விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியுள்ளார். கூட்டத்தின் முடிவில் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணை அளவை குறைப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

Categories

Tech |