Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரியாய் நடித்து வீட்டில் கொள்ளை…

சென்னையில்  திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம்  நெற்குன்றம் பல்லவன்  நகரை சேர்ந்த நூருல்லா  என்பவர் வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை எடுத்த கும்பல் அவர்களைத் தடுத்தமுயன்ற  நூருல்லாவை தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  பிடித்து விசாரணை செய்தனர்

Categories

Tech |