மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐநா சபை அறிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக சேர ஐநா பொதுச் சபையில் 193 நாடுகளில் 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவின் உறுப்பினராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய வீரர்கள் பின் வாங்கும் போது அங்குள்ள பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. புச்சா பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை தொடர்ந்து 40 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவின் நீக்க வேண்டும் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உக்ரைன் பிரதிநிதி ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யக் கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒரு வாய்ப்பு அல்ல. மேலும் அது ஒரு கடமை என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஐநா பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வில் ரஷ்யாவை அகற்றுவது குறித்து வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தொகை 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை முன்னதாக ரஷ்யாவை விட நிறுத்தத்திற்கான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிப்பது இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கதாகும்.