துளசியில் இருக்கும் நன்மைகள் பல:
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, முதலிய பல இனங்கள் உண்டு..
- துளசி பூங்கொத்துடன் வசம்பும், திப்பிலியும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும்.
- இலைகளை பிட்டு போல அவித்து, சாறு பிழிந்து, 10 மில்லி காலையும், மாலையும் என இருவேளை குடித்து வந்தால் பசியை பலப்படுத்தும். ரத்தம் சுத்தமாகும் ,தாய்ப்பால் அதிகரிக்கும்.
- துளசி இலைசாறு 10 மில்லி, தேன் 50 மில்லி, வெந்நீர் 50 மில்லி என கலந்து காலை, மாலை என இருவேளை 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும்.
- துளசி இலைச்சாற்றில், மாசிக்காயை நன்கு குழைத்து, அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் மற்றும் வயிற்று வலி குணமாகும்.
- துளசி இலைச்சாறு, வில்வ இலைச்சாறு வகைக்கு 100 மில்லி, எடுத்து அத்துடன் 20 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் தொல்லை நீங்கும்.
- துளசி சாறு, வெங்காய சாறு, எலுமிச்சை பழச்சாறு, விளக்கெண்ணெய் இவற்றை சம அளவு எடுத்து காய்ச்சி 15 முதல் 30 மில்லி வீதம் உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
- துளசி விதையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் வெள்ளைபடுதல், மேக நோய்கள் குணமாவதுடன், மகப்பேறும் , ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உட்கொண்டு வந்தால் பிரசவம் எளிதாகும்.