வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் நகர் காமராஜ் தெருவில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விக்னேஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விக்னேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.