கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமரின் சடலம் தோட்டத்துக்கு கிணற்றில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ராமரின் சடலத்தை மீட்டனர்.
அதன்பின் காவல்துறையினர் ராமரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.