இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் உணவு, எரி பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஐந்து முறை இதுபோல் எரிபொருள் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு பெரிய அளவில் உதவிகள் புரிந்து உள்ளதாகவும் பிரதமர் மோடிக்கு நன்றிகள் எனவும் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இலங்கை இந்தியாவுக்கு நெருக்கடியான சமயத்தில் பேருதவி புரிந்துள்ளதாகவும் இலங்கை மக்கள் இந்தியர்களுக்கு பெரிய அளவில் கடன் பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருநாளும் இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.