Categories
அரசியல்

சி.இ.டி. பொது நுழைவுத்தேர்வு:… எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பெங்களூரூ பொறியியல், பிஎஸ்சி, விவசாயம் மற்றும் பிடெக் உட்பட பல உயர் படிப்புகளுக்கான கர்நாடக அரசு நடத்தும் சி.இ.டி. எனும் பொது நுழைவுத்தேர்வு ஜூன் 16, 17, 18ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பி.யு.சி. 2ஆம் ஆண்டு முடித்த பிறகு பொறியியல், ஹோமியோபதி, பிஎஸ்சியில் விவசாயம், தோட்டக்கலை, வனம், விவசாய பயோ தொழில்நுட்பம், பிடெக், விவசாய பொறியியல், உணவு தொழில்நுட்பம், டெய்ரி தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பி.பார்ம், டி.பார்ம். ஆகிய படிப்புகளுக்கு 1994 முதல் சி.இ.டி., தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வருடத்திற்கான சி.இ.டி. தேர்வுகால அட்டவணையை, உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா வெளியிட்டார்.

அந்த வகையில் ஜூன் 16 காலை 10:30 மணியில் இருந்து 11:50 மணி வரை உயிரியியல், மதியம் 2:30 மணியில் இருந்து 3:50 மணிவரை கணிதம், ஜூன் 17 காலை 10:30 மணியில் இருந்து 11:50 மணிவரை இயற்பியல், மதியம் 2:30 மணியில் இருந்து 3:50 மணிவரை ரசாயனவியல், ஜூன் 18 காலை 11:30 மணியில் இருந்து மதியம் 12:30 மணிவரை வெளிநாடு, வெளி மாநில மாணவர்களுக்கு கட்டாய கன்னட தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கு ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 5:30 மணிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்பின் தேர்வு கட்டணம் செலுத்த ஏப்ரல் 22 கடைசி நாள் ஆகும். மே 2 காலை 11:00 மணியில் இருந்து மாலை 5:30 மணிவரை விண்ணப்பத்தில் திருத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மே 5ல் காலை 11:00 மணியில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Categories

Tech |