Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளின் மீது ஜீப் மோதல்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் அவருடைய நண்பர் ரூபன் ஆகியோர் கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் பைக்காரா பகுதி அருகே சென்ற போது அவ்வழியே வந்த ஜீப் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரூபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பைக்காரா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக‌ ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |