5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.