Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தினந்தோறும் பெட்ரோல் , டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாதன் துரை தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாலுகா செயலாளர் முனியசாமி, தர்மலிங்கம், கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |