5 கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மீனவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் சோமசுந்தரம் தனது படகியில் இருந்த வலையை விரித்து கடலுக்குள் வீசியுள்ளார். அப்போது வலையில் திட்டிரென 5 சாக்கு மூட்டைகள் சிக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கடலோர காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, ஞானசேகரன், எட்டு வெற்றி செல்வன் ஆகியோர் கரைக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 5 முட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சா மூட்டை கடலுக்குள் எப்படி வந்தது? யாராவது கடற்படையினரை பார்த்து மூட்டைகளை கடலில் வீசி விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.