வாலிபரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையின் பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமர்பாரூக்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று உமர்பாருக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில். உமர்பாருக்கை கொலை செய்தது பிரவீன், பிரபாகரன், குமார், தர்மா, கார்த்திக், விமல் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் உமர்பாருக்குக்கும் இவர்களும் வழிப்பறியில் ஈடுபட்ட தாகவும், அதில் கிடைத்த பொருட்களை சரியாக பங்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த இவர்கள் உமர்பாரூக்கை கொலை செய்வது தெரியவந்துள்ளது.