Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பெரியநாயகி அம்மன் திருக்கோவில்  திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து மாலை சிறப்பு தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |