ரஷியாவிடமிருந்து 1 முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா மீது அமெரிக்கா இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பெரிய இறக்குமதி அவர்களுக்கு கச்சா எண்ணை மற்றும் இதர சரக்குகளை சலுகை விலைகளில் வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது.
அதனை ஏற்று அவரிடமிருந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பொதுத்துறை நிறுவனங்கள் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் சலுகைகளை வாங்கும் இந்தியா மீது சர்வதேச அரங்கில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவின் சட்ட ரீதியான எரிசக்தி பரிவர்த்தனைகளை அரசியலாக்க கூடாது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது.
இந்தநிலையில் ரஷ்யாவிடமிருந்து ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எரிசக்தி கொடுப்பனவுகள் சில அறிக்கையை பெறுவது அனுமதி அல்ல அது ஒவ்வொரு நாடும் எடுக்கும் முடிவு.மேலும் நாங்கள் முடிவெடுத்தாலும் மற்ற நாடுகள் எரிசக்தி இறக்குமதியை தடை செய்ய முடிவு செய்தாலும், ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த தேர்வுகளை செய்யப் போகிறது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
மேலும் ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதி விரைவுபடுத்துவது அல்லது அதிகரிப்பது இந்தியாவின் நலன் என்று நாங்கள் நம்பவில்லை. தற்போது ரஷ்ய எரிசக்தியின் உடனடி இறக்குமதி, இந்தியாவில் மொத்த எரிசக்தி இறக்குமதியில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் மட்டுமே என ஜென் சாகி கூறியுள்ளார்.