பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான சென்சார் பொருத்திய ஷு ஒன்றை நாசாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உருவாக்கியுள்ளான். கரிம்கஞ்ச் என்ற மாவட்டத்தை சேர்ந்த அன்குரித் கர்மாகர்என்ற சிறுவன் கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான பிரத்தியேக ஷூவை வடிவமைத்து உள்ளான்.
இதனை பார்வை குறைபாடு உடையவர் அணிந்து செல்லும் போது எதிர்வரும் தடைகளை ஷுவில் பொருத்தியுள்ள சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அந்த நம்பருக்கு எச்சரிக்கை செய்யும் என சிறுவன் தெரிவித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய இந்த சிறுவன் வருங்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளான். சிறுவனின் இந்த அசத்தலான கண்டுபிடிப்புக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.