Categories
மாநில செய்திகள்

மதுரையின் அடையாளம்…. சித்திரை திருவிழா… இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…!!!!!

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது.

மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் உள்  வளாகத்திலேயே பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டிருந்தது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது பக்தர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு  குறைந்தது அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வருவதற்கான ஏற்பாடுகள், கோவிலின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10:35 மேல் 20.54 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை போன்றோர்  செய்து வருகின்றன்னர்.

Categories

Tech |