மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது.
மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டிருந்தது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது பக்தர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்தது அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வருவதற்கான ஏற்பாடுகள், கோவிலின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10:35 மேல் 20.54 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.