சூரிய புயல் பூமியைத் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல் இன்று பூமியை 17 வகை ஒளி சிதறல்களுடன் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு செயற்கை கோள்கள் செயலிழந்தும் காணப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூமியின் மீது லேசான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சூரியனில் ஏற்படும் மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.