மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய ஆஸ்பத்திரி ரோட்டில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாஷா தனது மோட்டார் சைக்கிளை ரயில் நிலையம் வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.