Categories
தேசிய செய்திகள்

தலைமறைவாக இருந்த குற்றவாளி…. 12 வருடங்களுக்கு பிறகு கைது….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்டோஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஸ் என்ற ராஜ்குமார் (வயது 40). கடந்த 2008-ஆம் ஆண்டில் இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜ்குமார் இந்த வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அவரை பிடிக்க நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு போடப்பட்டு மாமல்லபுரம் காவல்துறையினர் கடந்த 12 வருடங்களாக அவரை தேடி வந்தனர்.

ஆனால் அவர் காவல்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் ராஜ்குமார் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் சென்ற மாமல்லபுரம் காவல்துறையினர் ராஜ்குமாரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |