Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற வீரமகாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வங்காரம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமாகாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஆற்றில் இருந்து   பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து நாளை பத்திரகாளி அம்மன் படுகளம்  பார்த்து வீதி உலா வருதல், திருநடன திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |