விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான பாலமுருகன் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலமுருகன் ஈஸ்வரனை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.