இலங்கைக்கு இந்தியா அளித்துள்ள கடனுதவி எரிபொருள் மற்றும் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான விமான எரிபொருள் பெட்ரோல் டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்திய அரசு இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி வழங்குவதாக கடந்த மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையையும் குறைக்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. சாதாரணமாக 16 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் 9ஆம் தேதி முதல் 13 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.