குட்டையில் குளிக்க சென்ற கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோதி நகர் பகுதியில் சிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவன் தனது வீட்டின் அருகாமையில் இருக்கும் வண்டிமேடு பாலாறு குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவ்வழியாக சென்ற சிலர் குட்டையில் சடலம் கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குட்டையில் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.