Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 அம்ச கோரிக்கைகள்…. வருவாய்த்துறை சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்க வேண்டும், தகுதியான நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் செந்தில்குமார் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |