Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று முன்தினம் மாலை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர். டி. வி.சீனிவாச குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் , மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

மேலும் இந்தப் போராட்டத்திற்கு வந்தவர்களை நகர தலைவர் செல்வராஜ் வரவேற்று பேசினார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டர் மற்றும் பைக்குகளுக்கு  மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து மத்திய அரசை கண்டித்து அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் குப்பன், நேமூர் துரை , ஐ.என்.டி.யூ.சி மாநில செயலாளர் காஜா மொய்தீன், வளவனூர் பேரூர் கழக தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொது செயலாளர் சேகர், ராஜேஷ், ரங்கன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீ ராம், ஒன்றிய கவுன்சிலர் வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், மாவட்ட செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக விழுப்புரம் to திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து  அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |