சட்டக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கலிங்கப்பட்டியில் கந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற கந்தகுமார் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கந்தகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.