இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம் பெண் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். இவளுக்கு முகநூல் மூலம் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதில் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருக்கும் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்திய போது கண்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளம்பெண்ணை மிரட்டி மீண்டும் கண்ணன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.