மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின் ஜபுவா,பர்வாணி மாவட்டங்களிலிருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ளக் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது பிரகாசமான கோடுகள் உருவாவது வழக்கம் ஆகும். மிகவும் அற்புதமான இந்த காட்சிகள் பெரும்பாலும் கேமராவில் சிக்குவது மிகவும் கடினம். ‘ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறை போன்றபொருட்களாகும். அவை பூமியின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய வேகத்தில் நுழைகின்றது. விண்வெளியில் ஒரு தூசி நிறைந்த பகுதியைக் கடக்கும்போது அதிவேகமாக அதாவது வினாடிக்கு 30 முதல் 60 கிமீ வேகத்தில் நுழைகின்றன.
அப்போது விண்கல் மழை என்று அழைக்கப்படும் ஒளிக் கோடுகளை உருவாக்குகின்றது. இந்த காட்சிகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. முன்னதாக மக்கள் இதனை ஏதோ ஒரு நாட்டில் செயற்கைக்கோள் தற்செயலாக விழுந்திருக்கலாம், அல்லது வேண்டுமென கூட விழுந்திருக்கலாம். இது விண்கல் பொழிவோ அல்லது தீப்பந்தமாகவோ தெரியவில்லை எனவும் ராக்கெட் ஆக கூட இருக்கலாம் என கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதுகுறித்த ஆய்வுகளை தற்போது வானியலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.