Categories
உலக செய்திகள்

நடுவானில் கோர விபத்து…. நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 இரண்டு KT1 ரக பயிற்சி விமானம் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியா நாட்டில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு KT1 ரக பயிற்சி விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.  இந்த பயிற்சி விமானமானது நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளனது.  இந்த விபத்தில் 3 விமானிகள்  உயிரிழந்துள்ளனர்.  மேலும் ஒரு விமானி  படுகாயமடைந்து இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.   இந்த விபத்து குறித்து அந்நாட்டின் விமானப்படை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் மீட்புக்குழுவினர்  ஈடுபட்டுள்ளார்கள்.  மேலும் சம்பவ இடத்தில் 3 ஹெலிகாப்டர்கள்,  20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக  இந்த KT1  ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் விபத்தில் நான்கு பேர்  சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Categories

Tech |