குடியிருப்பு பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் 9 காட்டு யானைகள் புகுந்துள்ளது. இவை ரன்னிமேடு, காட்டேரி, கரும்பாலம் பில்லி மலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது.
இந்நிலையில் கிளிண்டல் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதிக்குள் தற்போது காட்டு யானைகள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.