Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கர்ப்பமான மாணவி…. மாணவர் செய்த செயல்…. போக்சோவின் கீழ் கைது…!!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வயது மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை 14 வயது மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் சிவகங்கையிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த 14 வயது மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |