Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. கலைநிகழ்ச்சிக்கு சென்றதால் நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகிழங்கோட்டை கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான தேவமணி என்பவருடன் சேர்ந்து சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கார்காவயல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலையில் இருந்த சிமெண்ட் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தினேஷ், தேவமணி ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் சடலத்தையும்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |