மாநகராட்சிக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் பொதுமக்கள் வரி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி வரி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக வரி பாக்கி அதிகமாக வசூல் ஆகிறது. சுமார் 75 சதவீதம் அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.