Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முருகேசன் படுகாயமடைந்தார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |