நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராகி வருகின்ற மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் விதமாக தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் அச்சம் நீங்க டெல்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் பேசுகையில், தேர்வை எதிர் கொள்கின்ற மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வின்போது அச்ச சூழலில் இருந்து தங்களை விலகி இருக்க வேண்டும். நண்பர்களை காசை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முழு நம்பிக்கையுடன் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை கருத்தில் கொண்டு அதனை தொடர்ந்து செய்துகொண்டு இருங்கள். தேர்வு எழுதக்கூடிய அனைவரும் பண்டிகைக்கால மனநிலையுடன் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நேரடியாக மையத்திற்கு சென்ற தேர்வு எழுதும் போதே எப்படி இருக்கும், ஆன்லைன் தேர்வு எப்படி இருக்கும் என்று நன்றாக தெரியும். ஆங்கிலம் அல்லது மாநில மொழி என எந்த மீடியமாக இருந்தாலும் நமது மனம் பாடத்துடன் ஒன்று இருக்கும் போது பெரிய அளவில் வேறுபடாது என்பது பெருமூச்சு விடக்கூடிய ஒன்று. மாணவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைப் போலவே பெற்றோர்கள் தங்களுடைய கனவுகளை தங்களது குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்